search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்தூர் காமராஜர் அணை"

    • தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால், ஒரு வார காலத்திற்குள் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி தண்ணீர் மறுகால்பாயும் நிலை உள்ளது.
    • அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியதால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ப்பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி பகுதியில் மழை பெய்தால் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு மழை நீர் வரும்படி இயற்கை யாகவே மலையில் வா ய்க்கால்கள் அமைந்துள்ளன.

    ஆத்தூர் காமராஜர் அணை யின் மொத்த கொள்ளளவு 23.5 அடியாகும். திண்டுக்கல் மாநகராட்சி, சின்னா ளபட்டி, சித்தைய ன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 3 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் அணை க்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 16 அடி நீர் மட்டம் உள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால், ஒரு வார காலத்திற்குள் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி தண்ணீர் மறுகால்பாயும் என ஆத்தூர் நீர்பாசன விவசாயிகள் கூறுகின்றனர். அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியதால், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×